அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகமெங்கும் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் ஆதரவு வழங்கிமை குறிப்பிடத் தக்கது.
எனவே, மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கனவை நனவாக்க தளபதி ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னெடுக்கப்பட்ட இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில், இரத்தினபுரி மாவட்ட மக்கள் எவ்வித பேதங்களுமின்றி பலம் சேர்த்ததால் 100 வீதம் வெற்றி பெற்றுள்ளதாகவும், இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.