வவுனியா தினச்சந்தையை மீள திறக்க கோரி மரக்கறி வியாபாரிகள் திடீர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா மொத்த வியாபார நிலையத்தின் முன்பாக ஹொரவப்பொத்தானை வீதியை மறித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
கொரோனாவை காரணம் காட்டி, மூடப்பட்ட தினச்சந்தையின் வியாபாரிகளிற்கான இடத்தை பொருளாதார மத்திய நிலையத்தில் வழங்கிய போதும், அது பொருத்தமான இடமல்ல என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று தினச்சந்தை திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும், நேற்று திடீரென அந்த அறிவிப்பு மீள பெறப்பட்டது. சந்தை திறக்கப்படாமைக்கான காரணம் முரண்பாடாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அனுமதி வழங்கவில்லையென பொலிசார் தரப்பில் கூறப்பட்டது. தம்மால் அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சுகாதார பரிசோதகர்கள்தெரிவிக்கின்றனர்.
போராட்ட இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், திலீபன் ஆகியோர் சென்றுள்ளனர்.