நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி திறம்பட வழங்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே இதை தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய புாது இதை குறிப்பிட்டார்.
, கொவிட்-19 இறப்புகளில் 70 வீதமானவை தொற்றுக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களிடமிருந்தே பதிவாகிறது என்றார்.
தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட 10 வீதமானோரே கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
60 வயதில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் இறப்புகளின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவர் அளுத்கே கூறினார்.
இந்த வேளையில் திருமணங்கள் மற்றும் விருந்துபசாரங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வதால் இந்நோய் வேகமாகப் பரவுகிறது என்றார்.
கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் நிலையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுடன் சிகிச்சை நிலையங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.
கொவிட்-19 காரணமாக அண்மையில் உயிரிழந்த ராகம வைத்தியசாலை மருத்துவர் கயான் தந்தநாராயண, தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை வசதிகள் இல்லாததால் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது என்றும் மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்.