இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணங்ளின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (10) அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
கொழும்பு 05 (கிருலப்பனை/ நாரஹேன்பிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த நேற்று (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, உக்கிர சிறுநீரக பிரச்சினை மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.