பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருவபர் தான் கதிர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்றதுடன் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிவருகின்றது.
கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் கதிரின் கதாபாத்திரம் வராமல் இருந்தது. இந்நிலையில் கதிர் சீரியலை விட்டு விலகிவிட்டார் என்ற தகவலும், படவாய்ப்பு கிடைத்துள்ளதால் நடிப்பதற்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
நடிகர் குமரன், பிரபல நடிகை சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுவரை தங்களது குழந்தையை வெளியில் காட்டாமல் இருந்த இந்த தம்பதிகள் தற்போது தங்கள் குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
மேலும் புகைப்படத்தில் குமரன் தாடி வளர்த்து காணப்படுவதால் படவாய்ப்பு கிடைத்து அதில் தான் நடித்து வருகின்றார் என்பது உறுதியாகியுள்ளது.