உப்பு பொதிகளின் கீழ் பதுக்கி வைத்து கடத்திச் சென்ற ஒரு தொகை மஞ்சள் மற்றும் இரு பார ஊர்திகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனமடுவை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உப்பு பொதிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 மஞ்சள் பொதிகள் நிகரவெட்டிய மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் புத்தளம் மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.