கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600 முதல் 800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்கான நினைவு பலகையை திறந்துவைத்த பிரதமர் அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மிகவும் அழகான சுத்தமான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும், மக்களின் வாழ்க்கை நிலையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.