இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 13 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிக கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம் கொரோனா உயிரிழப்புக்கள் 422 ஆக உயர்ந்தன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேனையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர ஆஸ்த்துமா நோய் நிலை மற்றும் நீரிழிவு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, இருதய நோய் நிலை மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போம்புவல பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர ஆஸ்த்துமா நோய் நிலை, கொவிட்-19 தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபொட பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 தொற்று மற்றும் நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய் நிலை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உயர் இரத்த அழுத்தம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விஷமடைவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 தொற்று, நுரையீரல் நோய் நிலை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேஉட பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக சேதமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர இருதய நோய் நிலை மற்றும் சிறுநீரக நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.