நாட்டின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பதிவான நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள நிபுணர்களுடன் தொலை காணொளி ஊடாக இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – திகன மற்றும் பல்லேகல பகுதிகளிலும் லுணுகல – ஹெக்கிரிய பகுதிகளிலும் கடந்த நாட்களில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.