இந்திய அணியிலிருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா திடீரென விலகி விடுப்பில் சென்றதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ரா விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்தது.
தனிப்பட்ட காரணங்களால் நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு ஜஸ்பிரித் பும்ரா கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் விடுவிக்கப்பட்டார், மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது.
பும்ரா விடுப்பில் சென்றதற்கான காரணம் குறித்து பிசிசிஐ வட்டாரம் தற்போத தகவல் தெரிவித்துள்ளது.
தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான முன்எற்பாடுகளை செய்ய விடுப்பு வேண்டும் என பும்ரா பிசிசிஐ-யிடம் தகவல் தெரிவித்ததாக பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
27 வயதான பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.