கந்தர-நாகுட்டிய பகுதியில் 480 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 47 வயதான மாத்தறை-கெகனதுர பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.