இதன்படி, கொவிட்-19 தொற்றினால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அடால பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி வைத்தியசாலையில் மரணித்தார்.
கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதர வைத்தியசாலையில் மரணித்தார்.
இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர், முல்லேரிய ஆதர வைத்தியசாலையில் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.