இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்பதிவு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் மீண்டும் பதிவு செய்யப்படுவார்கள்.
மேலும் தற்போதைய பதிவின் போது கிடைக்கும் பயோமெட்ரிக் தரவுகளுக்கு மேலதிகமாக, கைரேகைகள் மற்றும் முக அம்சங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகளும் பெறப்படும். தர sri lanka uniaque digital ID என இந்த அடையாள அட்டைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகன பதிவு திணைக்களம் மற்றும் வருமான வரித் துறை போன்ற நிறுவனங்கள் இந்த திட்டம் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர் இந்த நிறுவனங்களுக்கு செல்லும் நபர்களுக்கு கைரேகை மாத்திரம் போதுமானதாக இருக்கும்.இந்த திட்டம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 250 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.




















