எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன்,இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ,தெற்கு,மேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மழை பெய்யும் பொழுது பொது மக்கள் பாதுக்காப்பாக செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.