திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பே கொலையில் முடிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண்ணும், அவரது மகளும் தப்பிக்க முயற்சித்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.