அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மோசடிகளில் ஈடுபட்டதாகவே அமைச்சர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இன்றைய தினம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, அமைச்சர் ரோஹித்தவிற்கு எதிரான லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.