கடந்த சில வாரங்களாக கொழும்பில் குறைந்துக்காணப்பட்ட கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் 106 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56 பேர் பத்தரமுல்லையில் கண்டறியப்பட்டனர்.
கடந்த சில வாரங்களில் கொழும்பில் 50க்கும் குறைவானவர்களே கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.
நேற்று மாத்திரம் கொழும்பில் நூறுக்கும் அதிகமானோர் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 313 பேர் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.