நிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவ சிப்பாய் ஒருவரை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பிய சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நிலாவரை பகுதியில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்ட முயற்சித்தபோது, அவ்விடத்திற்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அங்கு என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.
அதன்போது குறுக்கிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தவிசாளரிடம் நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன என வினவியதுடன் குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதற்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார்.
இதனையடுத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நீங்கள் யார்? எதற்காக விபரம் சேகரிக்கின்றீர்கள? உமக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது இந்த இடத்தில் என்ற கேள்வி எழுப்பினார்.
அதர்கு பதிலளித்த சிப்பாய், தான் கஜபா ரெஜிமண்ட்டைச் சேர்ந்த இராணுவ வீரார் என ஏற்றுக்கொண்டதுடன் தாம் மேலுடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார்.
இதனையடுத்து உமக்கு எதாவது இங்கே தேவைப்படுகின்றதா? எதாவது அலுவல் இருக்கின்றதா? என கடுந்தொனியில் தவிசாளர் எச்சரித்த நிலையில் குறித்த சிப்பாய் அங்கிருந்து உடனடியாக நீர் வளச் சபையினால் அமைக்கப்பட்டுள்ள பின்பக்கமாகவுள்ள நுழைவாயில் வழியாக நழுவினார்.
அத்துடன் அங்கிருந்த மூலிகைத்தோட்டத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் குறித்த சிப்பாய் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து தவிசாளர் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடத்திலும் தங்கள் திணைக்களம் இராணுவ மேற்பார்வையுடனா நடைபெறுகின்றது என தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கேள்வி எழுப்பியபோது அதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் மௌனம் காத்ததாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.