வட மாகாணத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
நேற்று தொற்றுறுதியானவர்களில், திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இன்றைய தினம் அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடலை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.