காலி, பதியதலாவை மற்றும் மீகஹாவத்த ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதியத்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல்-12 ரக துப்பாக்கியும், மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போம்பே பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போம்பே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மீகஹாவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மாஹேன சியம்பலாபே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















