இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் வில்லியமுக்கிடையே சமாதானம் செய்துவைக்க ஒரு பெண் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அது வேறு யாருமல்ல, இளவரசி கேட்தான்! இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு, ஒரு காலத்தில் பிரித்தானியாவில் பிரபலம். கேட்டை தன் சொந்த மூத்த சகோதரியாகவே நேசித்தவர் ஹரி.
மேகனை அவர் திருமணம் செய்தபின், எல்லாமே மாறிப்போனது. அவர்கள் நால்வரும் இணைந்து நால்வர் குழுவாக இருப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தால், மூவர் குழுவே உடைந்து ஹரி தனியாக பிரிந்ததுடன், ஹரியும் மேகனும் பல சர்ச்சைகளுக்குப்பின் பிரித்தானியாவை விட்டே வெளியேறும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவை விட்டு வெளியேறியபின், முதன்முறையாக இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, சகோதரர்கள் இருவரையும் சமாதானம் செய்துவைக்க தான் தயார் என்று முன்வந்திருக்கிறார் இளவரசி கேட்.
இன்னொரு பக்கம், தங்கள் தாயான இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கின்போது அவரது சவப்பெட்டியின் பின்னால் வில்லியம் ஹரி இருவரும் சிறுபிள்ளைகளாக துயரத்துடன் நடந்தபோது, அவர்களுக்கு துணையாக நடந்தவர்களில் தாத்தாவான பிலிப் முக்கியமானவர்.
இப்போது, ஹரியும் வில்லியமும் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கும் சூழலில், நிச்சயம் சகோதரர்களுக்கு தங்கள் தாயின் இறுதிச்சடங்கு முதலான விடயங்களை இந்த சம்பவம் நினைவுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.