இன்று மதியம் 12.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
நாடு பூராகவும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவுகளிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.



















