யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்திய இராணுவத்தினை வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர் நீத்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வருடம் அவரது 33ஆவது நினைவு தினம் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.