நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாதென பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். .
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றனர். எனவே அடிப்படைவாதிகள் தலைதூக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படமாட்டாது.
அடிப்படைவாதத்தை போதிக்கும் புத்தகங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் பிழையான விடயங்கள் சில கற்பிக்கப்படுகின்றன. அவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலை வழிபாடுகளில் ஈடுபடுவோரை கொலை செய்தல், வேற்று மதங்களை வழிபாடு செய்வோரை துன்புறுத்தல் போன்ற விடயங்கள் பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.
எனவே பிழையான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான விடயங்கள் நீக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.


















