யாழ்ப்பாணம் – தென்மராட்சி கரம்பகம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் வீதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் மோட்டார்சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது குறித்த இளைஞர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உதவி கேட்டு கத்திய நிலையில் தாக்குதல்தாரிகள் தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.