கொழும்பு புறநகரான மொறட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கோவிட் தடுப்பூசி நிலையத்தில் இன்று மிகவும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மொறட்டுவை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை இந்த பதற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
தான் வழங்கிய சீட்டுக்கு அமைய தடுப்பூசி வழங்கப்படவில்லை என நகர சபை தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய தடுப்பூசியை வழங்குவதாக சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
இதனையடுத்து மொறட்டுவை நகர சபை தலைவர் தனது கடமைக்கு தடையேற்படுத்தியதாக சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.