இலங்கை நயினாதீவில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இரகசியமாக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனால் தற்போது 15இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பிசிஆர் சோதனையின் பின்னர் இளைஞன், தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், சுகாதாரத்துறையினருக்கு தெரியாமல் நண்பர்களை தொலை பேசி மூலம் அழைத்து இரவு நேர மின்னொளியில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்சூ முன்தினம் வெளியான பிசிஆர் அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் பின் நடந்த தடமறியும் விசாரணையில், அவருடன் நேரடித் தொடர்பை மேற்கொண்டோர் விபரம் வெளியானது.
குறித்த நபருடன் நேரடித் தொடர்பினை மேற்கொண்ட அத்தனை குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்றில் இருந்து முற்றாக நீங்கியதும் குறிப்பிட்ட நபருக்கும் கூடிப் பழகி விளையாடியவர்களுக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அப்பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.