ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நநீல் வாக்னர்
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இரண்டு வருடங்களில் டெஸ்டில் தலைசிறந்த அணியாக கருதப்படும்.
இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவும் சரியான வகையில் தயாராகும் என்பதில் சந்தேகமில்லை.
நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.டத்துகின்றன.



















