இலங்கையின் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீப்பிடித்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஒரு கொள்கலனில் அபாயகரமான இரசாயனங்கள் இருந்துள்ளன, ஏனையவற்றில் பொருட்கள் மூலம் அலுமினிய பதப்படுத்துதல், அழகு சாதனப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், குறித்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் மக்களின் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்கள் நாட்டின் கடற்கரை பிரதேசங்களில் கரையொதுங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் குறித்த கப்பலின் குப்பைகள் மற்றும் பொதிகளுடன் மக்கள் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.