இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் கரை ஒதுங்கியுள்ளன. குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை அரிப்பு பகுதியிலும் இந்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை பிளாஸ்ரிக் தயாரிப்பிற்கான சிறிய உருண்டைகள் கப்பலில் இருந்து கடலில் கொட்டப்பட்டு, நீர்கொழும்பை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















