15 வயதான சிறுமியொருவரை தகாத முறையில் இணையத்தளம் மூலம் வர்த்தகம் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 8ஆம் திகதி மவுண்ட் லவனியா பொலிசாரால், குறித்த சந்தேகநபர் அழகிய யுவதிகளை விலைக்கு வாங்கி, இவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக நீண்டநாளாக அறியப்பட்ட ஒருவராக இருந்துள்ளார். இந்த நிலையில் சந்தேகநபர் , தாயொருவரையும், அவரது 15 வயதான மகளையும் தகாத முறையில் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய போது சிக்கியுள்ளார்.
அத்துடன் சிறுமியின் தாயாரை அவிசாவளை பகுதியிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்கு 21 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 15 வயதான மகளை மவுண்ட் லவனியாவிலுள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் தங்க வைத்து இணையத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்து, சிறுமியை தகாத தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
சிறுமி முதன்முதலில் வெள்ளவத்தையிலுள்ள ஒரு முதியவருக்கு ரூ .300,000 க்கு விற்கப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மவுண்ட் லவ்னியா ஸ்டேஷன் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையிட்டபோது 15 வயது சிறுமியும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த 3 சிறுவர்களும் பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
அதில் இரண்டு சிறார்கள், சந்தேகநபரின் முந்தைய திருமணங்களில் பிறந்தவர்கள் என்றும், மற்றைய சிறுவன், 15 வயது சிறுமியின் தம்பி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட தாயும், மகளும் பியகம பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சிறுமியின் தாயுடன் உறவை ஆரம்பித்த சூத்திரதாரி, அவர்களை மொரட்டுவ புறநகரிலுள்ள வீடொன்றிற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார்.
சில நாளின் பின்னர் 32 வயதான தாயை அவிசாவளையிலுள்ள வயோதிப செல்வந்தருக்கு 21 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
விற்கப்பட்ட தாயின் 15 வயதான மகளையும், தம்பியையும், தனது இரண்டு பிள்ளைகளையும் மவுண்ட் லவ்னியா ஸ்டேஷன் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்துள்ளதுடன் அந்த குடியிருப்பிற்காக நாளொன்றிற்கு ரூ .5 ஆயிரம் வாடகை செலுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.


















