• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கையில் பிணவறைகளில் குவியும் சடலங்கள்! தொடரும் சர்ச்சை

Editor1 by Editor1
June 10, 2021
in இலங்கைச் செய்திகள்
0
இலங்கையில் பிணவறைகளில் குவியும் சடலங்கள்! தொடரும் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ அண்மித்துள்ளது. தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் விபரங்கள் நாளாந்தம் அறிவிக்கப்படுகின்ற போதிலும், அவை சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் பதிவாகிய மரணங்களாகவே உள்ளது.

ஒரு மரணம் சம்பவித்து 3 வாரங்களின் பின்னரே அதற்கான காரணம் கொவிட் தொற்று என அறிவிக்கப்படுவது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் பிணவறைகளில் சந்தேகத்திற்கிடமான சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 426 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இவற்றில் 5 மரணங்கள் மாத்திரமே இம்மாதம் பதிவானவையாகும். அதற்கேற்ப இம்மாதம் முதலாம் திகதி ஒரு மரணமும், 3 ஆம் திகதி மூன்று மரணங்களும், 5 ஆம் திகதி ஒரு மரணமும் என குறித்த 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

எஞ்சிய 421 கொவிட் மரணங்களும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பதிவாகியவையாகும். அதற்கேற்ப மே மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது சுமார் ஒரு மாதத்தின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் தொற்று உறுதிப்படுத்தப்படும் வரை உயிரழிப்பவர்களின் சடலங்களுக்கு என்ன ஆகிறது? வைத்தியசாலைகளில் பிணவறைகளில் வைக்கப்படுகின்றனவா? அல்லது உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனவா?

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பான தகவல்கள் சுமார் 3 வாரங்களின் பின்னர் அறிவிக்கப்படுகின்றமையால் எழுந்துள்ள கேள்விகள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவை தொடர்பு கொண்டு வினவிய போது,

சடலமொன்றில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அதனை தகனம் செய்வதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அது குறித்த தகவல்களை வெளியிடுகின்றோம்.

இதன்போது பி.சி.ஆர். அறிக்கை கிடைப்பதற்கு சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும். எனவே அதுவரையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சடலங்களை வைத்திருப்பதில்லை’ என்று அவர் பதிலளித்தார்.

சடலங்களுக்கு என்னவாகிறது என்று ஸ்திரமாகக் கூற முடியாது என்பதே தொற்று நோயியல் பிரிவின் பதிலாகவுள்ளது.

சடலங்களை ஒப்படைக்க முடியாது

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷிடம் வினவிய போது, ‘ சந்தேகத்திற்கிடமான மரணமொன்று இடம்பெற்றால் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது. எனவே சடலத்தை பிணவறையில் அல்லது உரிய இடங்களில் வைத்திருக்க வேண்டியேற்படும். தொடர்ச்சியான இவ்வாறான சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே இந்த சிக்கலுக்கு காணப்படும் மாற்று வழியாக, பிரதான வைத்தியசாலைகளுக்கு உடனடி பி.சி.ஆர். இயந்திரங்களை வழங்குமாறு நாம் தொடர்ந்தும் சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தி வருகின்றோம்.

அவ்வாறு வைத்தியசாலைகளுக்கு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டால் சடலங்களிலிருந்து பெறப்படும் மாதிரிகளை பிரதான ஆய்வுகூடங்களுக்கு அனுப்பாமல் அந்தந்த இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்வினைக் காண முடியும்.

எனினும் சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்காததன் காரணமாக பல இடங்களில் இந்தப் பிரச்சினை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கொவிட் என்று சந்தேகிக்கப்படும் மரணங்கள் பதிவாகும்போது ஏனையவற்றைப் போன்று குறித்த சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது.

இதன் காரணமாகவே பொது மக்களே அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எவ்வாறிருப்பினும் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தும் வரையில் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை’ என்று வைத்தியர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்கான தீர்வு கிடைக்குமா?

கொவிட் சடலங்கள் குறித்த சர்ச்சைக்கு, சம்மந்தப்பட்ட துறையுடன் தொடர்புடைய நிபுணர்களை தொடர்புகொண்ட போதிலும், மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்படுகின்றன.

தொற்று நோயியல் பிரிவின் பிரதானி கூறுவதைப் போன்று சடலங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னர் வைத்திருக்கப்படமாட்டாது என்றால் , பரிசோதனையின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அது சமூகத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்கக்கூடிய அபாயத்தை தோற்றுவிக்கும்.

மாறாக இலங்கை வைத்திய ஆய்வுகூட நிபுணர் சங்கம் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு அவதானித்தால், பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள் தேங்கிக் கிடக்கக்கூடிய நிலைமையே ஏற்படும். இது மருத்துவ நிர்வாகத்திற்கும் கட்டமைப்பிற்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனவே, சடலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை துரிதமாக வழங்குவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பதே இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும்.

Previous Post

வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்

Next Post

கொரோனா முன்கள பணியில் ரோபோக்கள்; விஞ்ஞானிகளின் அசத்தல்

Editor1

Editor1

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
கொரோனா முன்கள பணியில் ரோபோக்கள்; விஞ்ஞானிகளின் அசத்தல்

கொரோனா முன்கள பணியில் ரோபோக்கள்; விஞ்ஞானிகளின் அசத்தல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy