நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன் தினம் கூடிய தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் கோவிட் தொற்றில் வீழ்ச்சி காணப்படுவதாக பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் பயணக்கட்டுப்பாட்டினால் கோவிட் நோயாளர்களின் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்ற காரணத்தினாலும், சுகாதாரத்துறையினரின் தொடர் வலியுறுத்தலினாலும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தேசிய பாதுகாப்புச் சபையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.