கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி, தமது உரையில் கடந்த அரசாங்கங்களால் செய்யப்பட்ட விடயங்களை தாம் செய்ததாக பல பொய்களையே கூறினார் என்று ஐக்கிய மக்கள் கட்சியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தமது உரையில் நடைமுறையில் உள்ள முக்கிய பிரச்சினைகளை பற்றி குறிப்பிடாததும், அதற்கு தீர்வொன்றை வழங்காததும் மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.