இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவர் தொடர்பில் சர்ச்சைக்குரிய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
சமூக ஊடங்களில் இந்த காணொளி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணி தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணமொன்றை மேற்காண்டுள்ளது.
அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் விக்கட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் தொடர்பில் இந்த காணொளி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் டர்ஹம் நகர வீதியொன்றில் இருவரும் சிகரட் புகைப்பதற்காக ஆயத்தமாகும் காணொளியே இவ்வாறு சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்துள்ள நிலையில், இந்தக் காணொளி வெளியாகியுள்ளமை பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியின் ரசிகர்கள் குறித்த இரண்டு வீரர்களையும் கடுயைமான விமர்சனம் செய்து வருகின்றனர்.