கோவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆரம்ப காலப் பகுதியில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படும் எவ்வித திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.
தடுப்பூசி ஏற்றல் தொடர்பான தகவல்களை கணனி மயப்படுத்தி பேணுமாறு ஜனாதிபதி விமானப்படையினருக்கு அறிவுறுத்திய போது ஆரம்ப தரவுகள் திரட்டி பேணப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் நபர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்பட்டு ஒரு இடத்தில் பேணப்படும் என விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.