தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள தெலுங்கு படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டணி உறுதியானால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும்.
இப்படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகளாம், அவற்றில் ஒன்றில் நயன்தாராவையும், மற்றொரு கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகையையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.