மகளுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வைல் பார்லேவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பாட்டீல்(68). மயக்கு மருந்து நிபுணரான இவர் தனது மனைவி சாயா மற்றும் மகள் ஜுலி(37) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பாடீலுக்கு கொரானா ஊரடங்கு காரணமாக சரியாக வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
மேலும் இவரது மகள் ஜுலிக்கு 37 வயதாகியும் திருமணம் செய்து வைக்கமுடியவில்லையே என்று மனம் வருந்தியும் காணப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த வாரம், மனைவி மற்றும் மகளுக்கு ரத்த பரிசோதனை எடுப்பதாக பொய் கூறி அவர்களின் உடம்பில் விஷத்தை செலுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய உடம்பிலும் விஷத்தை செலுத்தியுள்ளார்.
மறுநாள் காலையில் அவரின் மனைவி சாயா எழுந்து பார்த்த போது கணவரும், மகளும் உயிரிழந்து கிடப்பதை அவதானித்து, அதிர்ச்சியில் ஆழ்ந்த அவர் பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, பாட்டீல் விஷம் செலுத்தியதில் மனைவி மட்டும் தப்பியுள்ளதும், அவரது மகளும் கணவரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பொலிசார் இதுகுறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.