நாட்டின் சில மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் 12 மணித்தியால காலப் பகுதியில் நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.