அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி இன்று அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
முதற்கட்டமாக 26,000 பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகள் விமான நிலைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடன் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அவை 12 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.