இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கிரிஷ்ணப்பா கௌதம் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே இந்திய அணியில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















