நாட்டில் கோவிட் தொற்றானது தீவிர நிலையை அடைந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி கோவிட் தொற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், டிக்கடி கைகளைக் கழுவுங்கள், முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம், பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும், கண், மூக்கு, வாய் – அடிக்கடி தொட வேண்டாம், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை களுபோவில வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலை தொடர்பில் படங்களுடன், இந்தியாவைப் பற்றி படித்த செய்திகளை தற்போது நேரில் பார்க்க முடிவதாக சுட்டிக்காட்டியிருந்த பதிவொன்று நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🧼 அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
😷 முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம்.
🚶🏻♂️-🧍🏻♀️பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும்.
💁♂️ கண், மூக்கு, வாய் – அடிக்கடி தொட வேண்டாம்.
💉தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
🏡 முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.#StayHome #WashYourHands
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 6, 2021