வடக்கு மாகாண பிரதம செயலாளரான சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.