• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

விவாகரத்தை நோக்கி விரைந்து செல்ல வேண்டாம்

Editor1 by Editor1
August 12, 2021
in ஆரோக்கியம்
0
விவாகரத்தை நோக்கி விரைந்து செல்ல வேண்டாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விவாகரத்தாகிவிட்ட பின்பு, நடந்து முடிந்த விஷயங்களையே மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டிருக்க கூடாது. புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்தவேண்டும்.

 

 

தேடிக் கண்டுபிடித்து பல்வேறு விதங்களில் பல மாதங்கள் விசாரித்து மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்கிறார்கள். ஏகப்பட்ட அலைச்சல், கடும் உழைப்பு, கணக்கற்ற பணத்தை செலவு செய்துதான் மணவிழாவில் அவர்களை கணவன்-மனைவியாக இணைத்துவைக்கிறார்கள். இதில் பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட கனவுகளோடுதான் புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைக்கிறார்கள். கணவரோடு கல்யாண வாழ்க்கையை தொடங்கும் பலரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தாலும் ஒருசில பெண்களின் வாழ்க்கை திசைமாறி விவாகரத்தை நோக்கி சென்றுவிடுகிறது.

‘வேறு வழியே இல்லை.. விவாகரத்து மட்டுமே தீர்வு’ என்று நினைக்கும் பெண்கள், சில முக்கியமான விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். அவைகளை நன்றாக புரிந்து தெளிவுபெற்ற பின்புதான் பெண்கள் விவாகரத்து பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.

விவாகரத்து செய்துகொண்ட பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். கணவரால் ஏற்பட்ட துக்கம், துரோகம், ஏமாற்றம், அலைச்சல் போன்றவைகளை அவர்கள் கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில மாதங்களாகும். அப்போது அவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்படுவார்கள். வன்மம், குற்ற உணர்ச்சி போன்றவைகள் தலைதூக்கும். இவைகளை எல்லாம் நீங்களும் எதிர்கொண்டு படிப்படியாக அதில் இருந்து மீண்டு வெளிவரவேண்டியதிருக்கும்.

விவாகரத்தாகிவிட்ட பின்பு, நடந்து முடிந்த விஷயங்களையே மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டிருக்க கூடாது. புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்தவேண்டும். பழையதை மறந்து, புதியதை நோக்கி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நகர்த்திச்செல்ல தயாராக இருக்கவேண்டும்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு அதிக மனஉளைச்சல் ஏற்படாது. குழந்தைகள் இருந்து பெற்றோர் பிரியும்போது, அவைகள் பெரிதும் பாதிக்கப்படும். இருவரது அரவணைப்பிலும் இணைந்து வளர்ந்த குழந்தைகள், பெற்றோர் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்துபோவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.

விவாகரத்து செய்துகொள்வதற்கு முன்பு இருவரும் இணைந்து குழந்தைகளிடம் பக்குவமாக பேச வேண்டும். ‘உங்களின் அனைத்து தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றிவைப்போம். எங்கள் பிரிவை நினைத்து நீங்கள் கலங்க வேண்டியதில்லை’ என்று கூறி, குழந்தைகளுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கவேண்டும். வார்த்தைகளோடு அதை விட்டுவிடாமல் செயலிலும் காட்டவேண்டும்.

விவாகரத்து ஆகும்போது அனைத்து குழந்தைகளுமே தாயின் அரவணைப்பை நாடித்தான் வருவார்கள். தாயின் பராமரிப்பில்தான் அவை வளரவும் விரும்பும். ஆனால் விவாகரத்துக்கு பின்பு குழந்தைகளிடம் தனது செல்வாக்கை நிரூபித்து அவைகளை தன் பக்கம் இழுக்க கணவர் முயற்சிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது என்ன செய்யவேண்டும் என்பதை விவாகரத்துக்கு முன்பே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

திறமை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறமுடியும். கணவரோடு வாழ்ந்தது வரை உங்கள் திறமைகள் முடக்கப்பட்டிருக்கலாம். விவாகரத்துக்கு தயாராகும்போது முதலில் உங்கள் திறமைகளை எல்லாம் புத்தாக்கம் செய்யவேண்டும். புதுவேகத்தில் அந்த திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த திட்டமிடவேண்டும். கூடுதலாக கற்று, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் தன்னம்பிக்கையையும் கொண்டிருக்கவேண்டும்.

பெண்கள் விவாகரத்து செய்துகொண்டதும் சிலர் தேடிவந்து ஆறுதல் சொல்வார்கள். உதவுவதாக உறுதிகொடுப்பார்கள். அப்படிப்பட்ட அனுதாப கூட்டத்திற்குள் ஒருபோதும் பெண்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. அனுதாபத்திற்குள் சிக்கிக்கொண்டால் அதிலே மூழ்கி விடுவீர்கள். மற்றவர்கள் காட்டும் அனுதாபம் சிறிது காலத்திற்குதான் கைகொடுக்கும். அதனால் தொடக்கத்தில் இருந்தே மற்றவர்கள் உங்கள் மீது அனுதாபம் காட்ட இடம்கொடுத்து விடக்கூடாது. அடுத்தவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கேட்டு விவாகரத்துக்கான முடிவை எடுத்துவிடாதீர்கள்.

ஒரு பெண் விவாகரத்து பெறும்போது அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். கணவனும்- மனைவியும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம். ஒருவேளை தவறு பெண்கள் பக்கமே இருக்கலாம். அப்படி தவறு உங்கள் பக்கம் இருந்தால் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் செய்த தவறை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. தவறுகளை திருத்திக்கொண்டால்தான் வாழ்க்கையில் சரியான பாதையில் பணிக்கமுடியும்.

விவாகரத்து செய்த பெண்கள் பலர் வாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கலாம். அதையே நீங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் வாழ்க்கையும் அதுபோல் ஆகிவிடும் என்று பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ முன்வரவேண்டும். அதே நேரத்தில் முடிந்த அளவு விவாகரத்து செய்யாமல் பொருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.

Previous Post

ரோஸ் வாட்டரை சருமத்திற்கு ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Next Post

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு!

Editor1

Editor1

Related Posts

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்
ஆரோக்கியம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

October 27, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
ஆரோக்கியம்

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

October 19, 2025
மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
ஆரோக்கியம்

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

October 8, 2025
கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
ஆரோக்கியம்

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

October 8, 2025
வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!
ஆரோக்கியம்

வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!

September 28, 2025
நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!
ஆரோக்கியம்

நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!

September 26, 2025
Next Post
தமிழகத்தில்  கொரோனா சிகிச்சை கட்டணம்  மாற்றியமைப்பு!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025

Recent News

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy