கிராமப்புற தொழில்கள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் அமைச்சர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனிமைப்படுத்தலுக்குப் பிந்தைய பிசிஆர் பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடமையில் கடந்த சில நாட்களாக சுகாதார பரிந்துரைகளின்படி செயற்பட்டதால் பலர் பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன்.
இருப்பினும், உங்களுக்கு நெருக்கமான அனைவரையும் பிசிஆர் அல்லது அன்டிஜென் சோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.