நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று, உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஊரடங்கிலும் தேரேறி வந்து செல்வச்சந்நிதி முருகன் பக்தர்களுக்கு காட்சிகொடுத்தமை பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.




















