• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்

Editor1 by Editor1
August 27, 2021
in ஆரோக்கியம்
0
குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.

நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. நாம் நம்பும்படியான சம்பவங்கள் நமது வீட்டிற்குள்ளும் நடக்கும். வெளியேயும் நடக்கும். ஆனால் அதன் உண்மை இன்னொருவிதமானதாக இருக்கும். அதுபோல் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எங்கேயாவது நடந்து, அது நமது கவனத்திற்கு வரும்போது ‘எங்கோ.. யாருக்கோ நடந்திருக்கிறது.. நமக்கென்ன..’ என்று கடந்துபோய் விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவம் நமது வீட்டிலும் நடக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படுவது நமது மகனோ, மகளாகவோ இருக்கவும்கூடும்.

தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.

உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.

வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.

Previous Post

குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும்

Next Post

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பீ.ஏ.சரத்சந்திர பதவி ஏற்றுக்கொண்டார்

Editor1

Editor1

Related Posts

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்
ஆரோக்கியம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

October 27, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
ஆரோக்கியம்

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

October 19, 2025
மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
ஆரோக்கியம்

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

October 8, 2025
கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
ஆரோக்கியம்

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

October 8, 2025
வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!
ஆரோக்கியம்

வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!

September 28, 2025
நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!
ஆரோக்கியம்

நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!

September 26, 2025
Next Post
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக  பீ.ஏ.சரத்சந்திர பதவி ஏற்றுக்கொண்டார்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பீ.ஏ.சரத்சந்திர பதவி ஏற்றுக்கொண்டார்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025

Recent News

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி

December 22, 2025
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

December 22, 2025
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா

December 22, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy