கோவிட் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கர்ப்பிணிப் பெண் காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.