நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்துகள் மீதான தடை வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.



















