மகாளய பட்சத்தின் அவிதவா நவமி இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன்றையதினத்தில் சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை அல்லது ஜாக்கெட் மங்கல பொருட்கள் வழங்கலாம். இதனால் பித்ருக்களின் ஆசீர்வாதமும் சுமங்கலியாக இறந்துவிட்ட பெண்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.
நம்முடைய குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். மகாளய பட்சத்தின் 9ஆம் நாள் அவிதவா நவமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் நம் வீட்டில் சுமங்கலியாக மரணம் அடைந்த முன்னோரை நினைத்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.




















